For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர்களுக்கு குளுக்கோஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஓட்டளிக்க வரும் வாக்காளர்கள் வெயிலில் சோர்வடையாதிருக்க அவர்களுக்கு குளுக்கோஸ் போன்றவற்றை விநியோகிக்கதேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மே 10ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. கொளுத்தும் வெயில் மண்டையைப் பிளப்பதால் வாக்காளர்கள் அதிகஅளவில் வருவார்களா என்ற கவலை தேர்தல் அதிகாரிகளுக்கு உள்ளது. இதனால் வாக்காளர்களை கவர சில திட்டங்களைஅவர்கள் தீட்டியுள்ளனர்.

வாக்குச் சாவடிகள் முன்பு பந்தல் போடுவதாக ஒரு திட்டம் உள்ளது. வாக்குச் சாவடிகள் முன்புறம் குளிர் தண்ணீர் வைக்கவும் ஒருஐடியா வைத்துள்ளனர். இப்போது அதற்கும் மேலாக குளுக்கோஸ் போன்றவற்றை விநியோகிக்கும் ஐடியாவை, தேர்தல்ஆணையர்களான கோபால்சாமியும், டாண்டனும் கொடுத்துள்ளனர்.

சென்னைக்கு வந்திருந்த இரு ஆணையர்களும்,தேர்தல் தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போதுகுளுக்கோஸ் கொடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 40 குளுக்கோஸ் பாக்கெட்டுகள் கொடுக்கப்படும். வருகிறவாக்காளர்களுக்கு "ஆளுக்கு ஒரு வாய்" குளுக்கோஸ் கிடைக்க இது வழி செய்யும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X