தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்ற கிராமங்கள்
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்த தேர்தல்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது திருவேடகம், தச்சம்பத்து கிராமங்கள். இந்தக் கிராமத்தில் சரியானநீர்ப்பாசன வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள்கண்டுகொள்ளவில்லை.
இதனால் கோபமடைந்த கிராமத்தினர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இருகிராமங்களுக்கும் சென்று கிராமத்தினருடன் பேசினார்.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம், நான் வெற்றி பெற்று வந்தால் நிச்சயம் உங்களது கோரிக்கையைமுன்னுரிமை கொடுத்து கவனிப்பேன் என்று உறுதி அளித்தார். இதை ஏற்ற கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பைகைவிடுவதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications