வீரப்பன் காட்டுப் பகுதியில் அதிரடிப்படை பாதுகாப்புடன் வாக்குப் பதிவு
அந்தியூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் தொல்லை நிறைந்த பர்கூர், அந்தியூர் மற்றும் தர்மபுரியின் காட்டுப்பகுதிகளுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள் மிக பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இங்கு அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் நடந்து வருகிறது.
ஜீப்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுடன் அதிகாரிகள் அமர்ந்திருக்க, அதில் 4 அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகள் சகிதமாக பாதுகாப்புக்கு உட்கார்ந்திருந்தனர்.
இந்த ஜீப்களுக்கு முன்னும், பின்னுமாக ஆட்டோமேட்டிக் ரைபிள்களுடன் கமாண்டோ வீரர்கள்ஜீப்களில் சென்றனர்.
அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஜீப்களை விட்டு இறங்கிய கமாண்டோ வீரர்கள் மின்னணு எந்திரங்கள்இருந்த ஜீப்பின் முன்னும் பின்னும் நடந்து சென்றனர்.
12 வாக்குச் சாவடிகளுக்கு இப்படித்தான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இந்தப் பகுதிகளில் இன்று நடந்து வருமா வாக்குப் பதிவுக்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் ஏந்திய அதிரடிப் படையினரின் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.