வாக்காளர் பட்டியலில் பெயரை பொன்னையனே நீக்கினார்: திமுக
சென்னை:
வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரையும், குடும்பத்தினரின் பெயரையும் அமைச்சர் பொன்னையனேநீக்கியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
தமிழகத்தில் சிறுபான்மையினர், அரசு ஊழியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்குஜெயலலிதா அரசு தான் காரணம். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
இவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதால் தான், கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாகும் என்று கூறிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், அதையும் தாண்டி எங்கள் கூட்டணி வெல்லும், வாக்கு வித்தியாசம்வேண்டுமானால் குறையலாம்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பொன்னையனின் பெயரையும் நீக்கியது திட்டமிட்ட நாடகம் என்றார்.
இந் நிலையில் திமுக அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் இன்று அண்ணா நகர் பகுதி வாக்காளர் பட்டியலைநிருபர்களிடம் காட்டினார். அதில், நீக்கப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் அமைச்சர் பொன்னையன், அவரது மனைவி சரோஜா,மகன் மதியழகன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் பொன்னையனே விண்ணப்பம் (பார்ம் 7) கொடுத்து தனது பெயரை பட்டியலில் இருந்து நீக்கியதாக,அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக இளங்கோவன் கூறினார். ஆனால், அதை நிரூபிக்கும் ஆதாரம் எதையும் இளங்கோவன்காட்டவில்லை.












Click it and Unblock the Notifications