வாக்கு எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியில் 7,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலில் பதிவானவாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் ராணி மேரிக் கல்லூரிஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மொத்தம் 7,000 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபைத் தொகுதி வாரியாக பதிவானவாக்குகள் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு விடும்.
வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டு வாக்குகள்எண்ணப்படுகின்றன. மிகப் பெரிய தொகுதிகளான வில்லிவாக்கம், திருவொற்றியூர் ஆகியவற்றிற்கு தலா 28டேபிள்கள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications