கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற இளங்கோவன்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து ஆசி பெற்றார் கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
திமுக கூட்டணியின் 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில் வெற்றி பெற்ற பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும்கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
கோபியில் வெற்றி பெற்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தனது மனைவி, மகன், மகளுடன் கருணாநிதியைகோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சந்தித்து ஆசி பெற்றார். பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றதற்காக அவருக்கு கருணாநிதிவாழ்த்து தெரிவித்தார்.
திமுக எம்.பிக்களான சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, கே.சி.பழனிச்சாமி ஆகியோரும் தங்களது குடும்பத்துடன் கருணாநிதியைசந்தித்தனர். ராதிகா செல்வி, சுகவனம், ராஜா, வெங்கடபதி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்தனர்.
காங்கிரஸ் எம்.பிக்களான ஜே.எம்.ஆரூண், தனுஷ்கோடி ஆதித்தன், என்.எஸ்.வி.சித்தன், தங்கபாலு ஆகியோரும்அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்தனர். பெரியகுளத்தில் தினகரனை கடுமையாகப் போராடி தோற்கடித்ததற்காக ஆருணைசிறப்பாக வாழ்த்தினார் கருணாநிதி.
அதே போல பாமக எம்.பிக்களான ஏ.கே.மூர்த்தி, அரக்கோணம் வேலு, புதுவை ராமதாஸ், தன்ராஜ், பொன்னுச்சாமி ஆகியோரும்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீனும் கருணாநிதியை சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications