ஜெயலலிதா அரசை கலைக்க டெல்லியில் ராமதாஸ் கோரிக்கை
டெல்லி:
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் எனபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
சோனியா காந்திக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். மத்திய அரசிலும் நாங்கள் பங்கேற்போம். சேது சமுத்திரம்திட்டத்தை அமலாக்குவோம் என்ற உறுதிமொழியையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தருவதையும் மத்தியஅரசின் பொது செயல் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளோம்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இதனால் தான்தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி கொடுத்துள்ளனர் மக்கள். மக்களின் உணர்வை மதித்து ஜெயலலிதாவின்அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
அதே போல காவிரி நடுவர் மன்றத்துக்கு அதிக அதிகாரம் தந்து, அந்த அமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு மாநிலஅரசுகள் கட்டுப்படும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications