அரசு மதுக் கடையில் கள்ளச் சாராயம் விற்பனை: குடித்த 2 பேர் சாவு
கோவை:
கோவை மாவட்டம் பல்லடம் நகரில், அரசு மதுக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் இறந்தனர். அவர்கள் சாப்பிட்டதுகள்ளச் சாராயம் என்று தெரிய வந்துள்ளது.
பல்லடம் நகரப் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக் கடையில் (டாஸ்மாக்) பாலசுப்ரமணியம், பண்டாரம் ஆகியஇருவரும் மது வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே இருவரும் வயிற்று வலியால், துடிதுடித்தனர். சிறிது நேரத்தில் இருவருமே ரோட்டில் சுருண்டுவிழுந்து இறந்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து இருவரும் சாப்பிட்ட மது இருந்த பாட்டிலைக் கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் சாப்பிட்டது விஷத்தன்மை அதிகமான கள்ளச் சாராயம் எனத் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அரசு மதுக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள. கடை ஊழியர்கள் 6 பேர் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மதுக்கடையில் கள்ளச் சாராயம் விற்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications