உயிரை மாய்க்காதீர்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதாகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு யமுனா என்பவர் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனமுடைந்துதற்கொலை செய்து கொண்டதாக அறிந்து வேதனை அடைந்தேன்.
இதுபோன்ற காரியங்களில் கழகத்தினர் ஈடுபடக் கூடாது. மாறாக, கட்சிப் பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும்,அக்கறையுடனும் ஈடுபடவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மறைந்த யமுனாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரதுகுடும்பத்திற்கு குடும்ப நல நிதியாக ரூ. 50,000 வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications