ஜெ., சசிகலா மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடக் கோரி வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த மனு சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடக்க இருந்தவிசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
1993--94 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும், 1991--92, 1992--93 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை சசிகலாவும் சமர்ப்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி கடந்த 11-ம்தேதி வருமான வரித்துறையின் உதவி ஆணையர், எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
இதற்கிடையே தங்களை இவ் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தஇரணடு மனுக்கள் மீதான இன்று நடைபெற இருந்தது.