ஜெ., சசிகலா மீதான வருமான வரி வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடக் கோரி வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த மனு சென்னை எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடக்க இருந்தவிசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
1993--94 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும், 1991--92, 1992--93 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை சசிகலாவும் சமர்ப்பிக்கவில்லை என்றும் வருமான வரித்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி கடந்த 11-ம்தேதி வருமான வரித்துறையின் உதவி ஆணையர், எழும்பூர் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
இதற்கிடையே தங்களை இவ் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதாவும் சசிகலாவும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தஇரணடு மனுக்கள் மீதான இன்று நடைபெற இருந்தது.












Click it and Unblock the Notifications