தமிழகத்தில் 25 மாவட்டங்களில் பருவ மழை தீவிரம்
சென்னை:
தமிழகம் முழுவதும் தென் மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதில் 25 மாவட்டங்களில், எதிர்பார்த்தஅளவுக்கு இல்லாவிட்டாலும் கூட, சராசரி அளவுக்கு மழை பெய்து வருவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், நாகை, கோவை, தர்மபுரி ஆகியமாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்தமாவட்டங்களில் கூடுதல் மழை பதிவாகியுள்ளது.
தேனி, விருதுநகரில் சராசரியைவிடக் குறைவான மழை அளவு பதிவாகியுள்ளது. வழக்கமாக பெய்யக் கூடியமழை கூட இங்கு பெய்யவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையினால்பெரு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் விவசாயப்பணிகளை தொடர முடியும்.
கேரளாவில் பருவ மழை படு தீவிரமாக இருப்பதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதி மாவட்டங்களில்கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் திடீரென பல மடங்காகிவிட்டது.