கர்நாடக முதல்வராக தரம்சிங் பதவியேற்பு
பெங்களூர்:
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம்சிங்கும், துணை முதல்வராக மதசார்பற்றஜனதா தளத்தைச் சேர்ந்த சித்தராமையாவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்பவனில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் அவர்களுக்கு கவர்னர் சதுர்வேதி பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரசும் தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும்இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுடன் கர்நாடகத்துக்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் 78 இடங்களைபா.ஜ.க. வென்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 65 இடங்களுடன் இரண்டாவதுஇடத்துக்குத் தள்ளப்பட்டது. மதசார்பற்ற ஜனதா தளம் 58 எம்.எல்.ஏக்களுடன் மூன்றாவதுஇடத்தைப் பிடித்தது.
இதையடுத்து ஆட்சியமைப்பதில் போட்டா போட்டி ஏற்பட்டது. ஜனதா தளத்தின் உதவியுடன்பா.ஜ.க. ஆட்சியமைக்க முயன்றது. ஆனால், அதற்கு தேவே கெளடாவின் ஆதரவு கிடைக்கவில்லை.
நாங்களே ஆட்சியமைப்போம், காங்கிரஸ் எங்களை ஆதரிக்க வேண்டும் என கெளடா கோரிவந்தார். இதனால் சிக்கல் எழுந்தது. கெளடாவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஏற்கவில்லை.
இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்போம், துணை முதல்வர் பதவியை மதசார்பற்ற ஜனதா தளத்துக்குவிட்டுத் தருவோம், ஆனால், முதல்வர் பதவி காங்கிரஸ் வசம் தான இருக்கும் என சோனியாகூறிவிட்டார்.
இதனால் கடந்த இரு வாரங்களாக பிரச்சனை தொடர்ந்தது. இறுதியில் காங்கிரசுடன் இணைந்துகூட்டணி ஆட்சியமைக்கவும், துணை முதல்வர் பொறுப்பை ஏற்கவும் கெளடா முன் வந்தார்.
இதையடுத்து இன்று இக் கூட்டணி அரசு பதவியேற்றது. மூத்த காங்கிரஸ் தலைவர் தரம்சிங்முதல்வராக பதவியேற்றார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான சித்தராமையாதுணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர் ஜே.எச். படேலின் அரசிலும் துணை முதல்வராகஇருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, காங்கிரசுக்கு 16 அமைச்சர்களும்மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 17 அமைச்சர்களும் ஒதுக்கப்படுவார்கள்.