ஈரோட்டி-லும் காலரா: சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே காலராவுக்கு சிறுவன் ஒ-ரு-வ-ன் பலியாகியுள்ளான்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் காலரா நோய் பரவி வருகிறது. தலைநகர் சென்னையின் வட பகுதியில் 1,000க்கும்மேற்பட்டோரை காலரா பாதித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் காலரா பரவியது. இந்தச் சூழ்-நிலையில் ஈரோட்டில்காலராவுக்கு சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
ஈரோடு மாவட்டம் பெ-ரிய அலங்காரம், வீரப்பன் சத்திரம், குருஞ்சட்டி ஆகிய கிராமங்களில் காலரா பரவியுள்ளது.இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் காலராவால் பாதிக்கப்பட்ட குறுஞ்சட்டியைச் சேர்ந்த வினோத் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.இதனால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications