விவாகரத்து கோரி ரகுவரன், ரோகிணி மனு
சென்னை:
நடிகர் ரகுவரனும், நடிகை ரோகி-ணியும் விவாகரத்து கோ-ரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சினிமா தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.கமல்-சரிகா, பார்த்திபன்-சீதா, ராம-ரா-ஜன்-நளி-னி வரிசையில் தற்போது ரகுவரன், ரோகி-ணிசேர்ந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் ரகுவரன் தன்னை -கொடுமைப்படுத்துவதாகவும், அடித்துத்துன்புறுத்துவதாகவும் ரோகி-ணி பரபரப்பு புகார் கூறினார். இதை மறுத்த ரகுவரன் குடிப் பழகத்திற்குஅடிமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
பின்னர் இருவரும் சமாதானமாகி விட்டதாக செய்திகள் வந்தன. இந் நிலையில் ரோகிணியும்,ரகுவரனும் சென்னை குடும்ப -நல நீதிமன்றத்திற்கு தனித்தனியாக வந்து விவாகரத்து கோ-ரி மனுத்தாக்கல் செய்தனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும்விவாகரத்து அளிக்குமாறும் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி விவாகரத்து சட்டப்பட்டி 6 மாதங்கள் இருவரும் பிரிந்து வாழவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 6 மாதங்களுக்குப் பிறகுநடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.