ஜெ. இன்னும் முழுமையாக திருந்தவில்லை: இளங்கோவன்
கோவை:
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா லேசாக திருந்தியிருக்கிறார். ஆனால் இன்னும் பலதவறுகளை அவர் திருத்திக் கொள்ளவில்லை என்று மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில தவறுகளை அவர்திருத்திக் கொண்டுள்ளார். ஆனால் கண்ணகி சிலை அதன் பழைய இடத்தில் இன்னும் வைக்கப்படவில்லை,பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம் ஆகியவை இன்னும் குறைக்கப்படவில்லை.
கல்விக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர், பாடப் புத்தகங்களின் விலையும் பயங்கரமாகஉயர்த்தப்பட்டுள்ளது. அதையெல்லாம் அதிமுக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவற்றை நிறைவேற்ற உதவுமாறு காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஜெயலலிதா கோரிக்கை விடுக்க வேண்டும். அதேபோல பிரதமர்மன்மோகன் சிங்கையும் சந்தித்து தமிழக திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.
இவர்களை ஜெயலலிதா சந்திக்காதவரை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைச் சந்திக்கமாட்டார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications