வீரப்பனை நெருங்கும் தமிழக அதிரடிப்படை
சத்தியமங்கலம்:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை வைத்துசந்தனக் கடத்தல் வீரப்பனின் இருப்பிடத்தை நோக்கி தமிழக அதிரடிப்படை வீரர்கள் முன்னேறிச் செல்வதாககூறப்படுகிறது.
வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியான தமிழர் அதிரடிப்படை தலைவர் சுப. இளவரசன் சமீபத்தில் அதிரடிப்படைபோலீஸாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக்கூறப்படுகிறது. குறிப்பாக வீரப்பன் இருப்பிடம் குறித்து பல தகவல்களை இளவரசன் தெரிவித்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்து வீரப்பன் இருப்பிடத்தை நோக்கி அதிரடிப்படை வீரர்கள் முன்னேறத்தொடங்கியுள்ளனர். மாதேஸ்வரன் மலை, பாலாறு, ராமாபுரம், கார்கே கண்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில்வீரப்பன் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்த முறை வீரப்பன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் கிடைத்துள்ளதால், அவனை உயிருடனோ அல்லதுபிணமாகவோ பிடித்து விட முடியும் என்று அதிரடிப்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications