கலாம் உறவினரிடம் ரூ. 50,000 திருட்டுசென்னை: குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய சூட்கேஸை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.ஷேக் தாவூத் பெங்களூரில் ஒரு கம்ப்யூட்டர் -நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலை காரணமாக அவர் சென்னை வந்திருந்தார். ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கிய அவர் அந்தப் பொருட்கள் அடங்கிய சூட்கேஸுடன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.பெங்களூர் செல்லும் ரயிலில் பெட்டியுடன் அமர்ந்திருந்த அவர், அருகில் இருந்த பயணியிடம் ஒரு காபி வாங்கி விட்டு வந்து விடுகிறேன். அதுவரை சூட்கேஸைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.காபியுடன் திரும்பி வந்தபோது சூட்கேஸையும், அதைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட -நபரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் ஷேத் தாவூத். இதுகுறித்து சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பெங்களூர் திரும்பிச் சென்றார்.
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர் ஷேக் தாவூத் என்பவர் வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய சூட்கேஸை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.
ஷேக் தாவூத் பெங்களூரில் ஒரு கம்ப்யூட்டர் -நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். அலுவலக வேலை காரணமாக அவர் சென்னை வந்திருந்தார். ரூ. 50,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கிய அவர் அந்தப் பொருட்கள் அடங்கிய சூட்கேஸுடன் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்தார்.
பெங்களூர் செல்லும் ரயிலில் பெட்டியுடன் அமர்ந்திருந்த அவர், அருகில் இருந்த பயணியிடம் ஒரு காபி வாங்கி விட்டு வந்து விடுகிறேன். அதுவரை சூட்கேஸைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டுச் சென்றுள்ளார்.
காபியுடன் திரும்பி வந்தபோது சூட்கேஸையும், அதைப் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட -நபரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார் ஷேத் தாவூத். இதுகுறித்து சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் பெங்களூர் திரும்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications