விபசார வழக்கு: புவனேஸ்வரி விடுதலை
சென்னை:
2002ம் ஆண்டு விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட டி.வி. நடிகை புவனேஸ்வரி நிரபராதி என அறிவிக்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டார்.
பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள், சில திரைப்படங்களில் நடித்துள்ளவர் புவனேஸ்வரி. கடந்த 2002ம்ஆண்டு சென்னை வட பழனியில் அவர் விபசாரத்திற்கு முயன்றதாக கூறி போலீஸார் புவனேஸ்வரி உள்ளிட்டசிலரை கைது செய்தனர்.
இதில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்தில் அபராதம் கட்டி விட்டு சென்றனர். ஆனால் புவனேஸ்வரி அபராதம்கட்டாமல் வழக்கை எதிர்கொண்டார். இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நடுவர்தீனதயாளன் முன்பு நடந்து வந்தது.
இந்த வழக்கில், புவனேஸ்வரி மீதான குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. எனவேஅவரை நிரபராதி என்று அறிவித்து விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து புன்னகை பூத்த முகத்துடன் புவனேஸ்வரி வெளியே வந்தார். விசாரணைகளின்போது முகத்தைமூடியபடி வந்த புவனேஸ்வரி தீர்ப்பின்போது பட்டுச் சேலையில் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் வந்திருந்தார்.
தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் என் மீது விரோதம் கொண்ட சிலஅரசு உயர் அதிகாரிகள்தான் இந்த பொய் வழக்குக்குக் காரணம். கடவுள் என்னைக் கைவிடவில்லை.உண்மைதான் ஜெயிக்கும் என்று கூறினார் அவர்.












Click it and Unblock the Notifications