போலீஸாரை மிரட்ட வீட்டுக்கு தீவைத்த பெண் !

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் சாராய வேட்டைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களைமிரட்டுவதற்காக வீட்டுக்குள் இருந்து கொண்டு வீட்டுக்குத் தீவைத்த பெண்ணை போலீஸார் மீட்டு கைது செய்தனர்.

சென்னையில் ஒரு கஞ்சா பெண்மணி, தன்னைப் போலீஸார் பிடிக்க வந்தால், தனது வீட்டைப் பூட்டிக் கொண்டுஉடைகள் அனைதையும் கழற்றி விட்டு நிர்வாணமாகி விடுவார். இப்போது வந்து பிடித்துச் செல்லுங்கள் என்றுபோலீஸாரை மிரட்டவும் செய்வார். இதனால் அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸார் பல காலம் தவித்துவந்தனர். இது சமீபத்தில் ஒரு தமிழ்ப் படத்தில் வடிவேலு நடிக்க காட்சியாகவும் வந்தது.

இதேபோன்ற ஒரு சம்பவம் கொஞ்சம் வித்தியாசமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.தேன்கனிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் வசந்தா. இவரும், கணவர் செல்வராஜுவும் கள்ளச் சாராயம்விற்பனை செய்து வருகிறார்கள்.

இவர்களது வீட்டில் கள்ளச் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அங்குவிரைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் வீட்டுக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டார் வசந்தா. பின்னர் கையில்மிளகாயப் பொடியை எடுத்து அதை வீசி விடுவதாக போலீஸாரை மிரட்டினார்.

இதுகுறித்துக் கவலைப்படாத போலீஸார் கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதையடுத்து,வீட்டுக்குள் இருந்தபடியே வீட்டுக்குத் தீவைத்தார். தீ மளமளவென பரவத் தொடங்கியது.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் போனது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். பின்னர் போலீஸார் வீட்டுக்குள் புகுந்து வசந்தாவைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+