ராவ் உள்பட விரைவில் ஆளுநர்கள் மாற்றம்?
டெல்லி:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று ஜனாதிபதி அப்துல் கலாமை ராஷ்ட்ரபதி பவனில்சந்தித்துப் பேசினார். மாநில ஆளுநர்களை மாற்றுவது குறித்து கலாமுடன் அவர் ஆலோசனைநடத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாண்டிச்சேரி ஆளுநர் என்.என்.ஜா இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் உள்ளனர்.இவர்களில் என்.என். ஜா உள்பட பலர் ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்தவர்கள்.
அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்வார்கள் என காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்பார்த்தது.ஆனால், அவர்கள் விலகவில்லை. இதையடுத்து அவர்களை நீக்கிவிட்டு புதிய ஆளுநர்கள்நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவும் நீக்கப்படவுள்ள ஆளுநர்கள் பட்டியலில் உள்ளதாகத்தெரிகிறது.
இந் நிலையில் இன்று கலாமை பாட்டீல் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பிய சிறிது நேரத்தில்என்.என்.ஜா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு பேக்ஸ் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது அவர் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ரங்கசாமியின் தொலைபேசியை என்.என். ஜா ஒட்டு கேட்பதாக பாண்டிச்சேரி காங்கிரஸ்எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் குற்றம் சாட்டியதையடுத்து அம் மாநிலத்தில பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பதவியை ஜா ராஜினாமா செய்துள்ளார்.
இவர் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானவராவார்.