ராமதாசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை
சென்னை:
பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ள திரைத் துறைக்கு பாதிப்பு வராத அளவுக்கு பாட்டாளிமக்கள் கட்சி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பாமக நிறுவனர்ராமதாஸுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
பா.ம.க.- விஜய்காந்த் மோதல் குறித்து விவாதிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டம் தலைவர்முரளிதரன் தலைமையில் சென்னையில் அவசரமாக கூடியது.
பின்னர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல லட்சம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது திரைத்துறை.இங்குப் படத் தயாப்பு முதல் திரையிடுவது வரை பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்பும், முதலீடும் உள்ளது.
விஜயகாந்த் கூறிய ஒரு கருத்துக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து பலவிதமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது.விஜயகாந்த் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. திரைத்துறையின் கருத்து அல்ல. எனவே பாமகவினரின்போராட்டத்தை விஜயகாந்த்துக்கு எதிரான போராட்டமாகக் கருத முடியவில்லை.
பாமகவின் போராட்டத்தால் திரைத்துறையே கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் திரைத் துறை நசிந்து வருகிறது. இந் நிலையில்பாமகவின் போராட்டத்தால் பல லட்சம் ஊழியர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே, போராட்டத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications