தலைமை ஆசிரியர் இடமாறுதலுக்கு தடை
சென்னை:
பள்ளியின் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி, தலைமை ஆசிரியரைஇடம் மாறுதல் செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் தேர்ச்சி விகிதம்குறைவாக இருந்ததால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக் ஏர்வாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
கடந்த கல்வியாண்டில் எனது பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 51 சதவீதமாக இருந்ததைக் காரணம்காட்டி என்னை வேறு ஊருக்கு அரசு மாறுதல் செய்துள்ளது.
ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்ததால்தான் 2001-ம் ஆண்டில் எனக்கு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுகிடைத்தது. அரசின் தற்போது பிறப்பித்த இந்த மாறுதல் உத்தரவால் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
எனது பள்ளியில் வேதியியல் பாடத்தில் 45 சதவீத தேர்ச்சிதான் கிடைத்தது. இதனால் வேதியியல் ஆசிரியைமணிமேகலை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன் என்ற ஆசிரியர்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றிய பள்ளியில் 37 சதவீத தேர்ச்சியே வேதியியல் பாடத்தில் கிடைத்தது.
45 சதவீதத் தேர்ச்சி கொடுத்த ஆசிரியையை மாற்றிவிட்டு, 37 சதவீதத் தேர்ச்சி மட்டும் கொடுத்த ஆசிரியரைநியமிப்பது வேடிக்கையாக உள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்கு ஏற்றதல்லஎன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.