கட்சி தொடங்குகிறார் விஜய்காந்த்?
சென்னை:
தனிக் கட்சி தொடங்க விஜய்காந்த் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
பா.ம.கவின் கோட்டையான வட மாவட்டங்களின் முக்கிய நகரான நகரான திருவண்ணாமலையில்தனது ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தி, அப்போதே கட்சியையும் தொடங்கிவிட அவர் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போது கோவையில் முகாமிட்டு தனது ரசிகர் மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தி வரும்விஜய்காந்த் நாளை சென்னை திரும்புவார் என்றும், சனிக்கிழமை கட்சி தொடங்கும் முடிவைவெளியிட்டக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஏற்கனவே கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிறத்திலான ஜோதியுடன் கூடிய கொடியைவிஜய்காந்த் தயார்படுத்திவிட்டார். தனது படங்களில் அந்தக் கொடிகளை அதிக அளவில்பயன்படுத்தியுள்ளார்.
இந்தக் கொடிகளை ரசிகர் மன்றங்களிலும் ஏற்றி வைத்து வரும் விஜய்காந்த், இப்போது புதியகட்சிக்கு பெயர் சூட்டும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த மாதம் 25ம் தேதி திருவண்ணாமலையில் ரசிகர் மன்ற மாநாட்டின்போது கட்சியையும்தொடங்கலாம் என்கிறார்கள்.
அரசியலில் இவர் எம்.ஜி.ஆர் ஆவாரா அல்லது சிவாஜியாவாரா என்பதை காலம் தான் பதில்சொல்ல வேண்டும்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின்கொடும்பாவியை ரசிகர்கள் எரிப்பதும், விஜய்காந்தின் கொடும்பாவியை பா.ம.கவினர் எரிப்பதும்ஆங்காங்கே இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.