சென்னையில் பல இடங்களில் சிபிஐ ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளின் வீடுகளில் மத்திய புலனாய்வுத்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், இந்தியன் வங்கி, சில காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் வைப்புநிதித் துறை அலுவலகங்களிலும், அந்த அலுவலகங்களின் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் வீடுகளிலும்சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காகவும்,வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும்நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியே இது என்று கூறினார்.
இந்தச் சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications