நிரம்பி வழியும் அணை, திறக்க மக்கள் எதிர்ப்பு
கரூர்:
மேட்டூர் அணையை எப்போது திறப்பார்கள் என காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் பெருத்த ஆவலுடன்காத்துக் கொண்டிருக்கையில், தண்ணீர் நிரம்பி வழியும் ஒரு அணையைத் திறக்கவே கூடாது என்று மக்கள்கோரிக்கை வைக்கும் விநோதமான அவலம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர்மாவட்டத்தைச் சேர்ந்த 20,000 ஏக்கர் பாசன நிலங்களின் நீர்ப்பாசன வசதிக்காகவே இந்த அணை கட்டப்பட்டது.
ஆனால் ஈரோடு, கரூர் மாவட்ட சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த அணையில் சேர்ந்துஅணையே மாசுபட்டு விட்டது. இதனால் இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீரை எதற்குமே பயன்படுத்த முடியாதநிலை நிலவுகிறது.
இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இந்தத் தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு செல்ல விடாமல் தடுக்க அதிகாரிகள் கடும் முயற்சியைமேற்கொண்டனர். ஆனாலும் அதையும் மீறி ஏராளமான தண்ணீர் அணைக்குச் சென்று அணை நிரம்பி விட்டது.
ஆனால் அந்தத் தண்ணீரைத் திறந்து விட்டால், பாசன நிலங்கள் பாழாகி விடும் என்பதால், என்ன ஆனாலும்அணையைத் திறக்கக் கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையைத் திறந்து விட அரசுமுயற்சித்தால், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றும்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் போல தண்ணீர் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத அவல நிலையில் ஒரத்துப்பாளையம் அணைப் பகுதிமக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications