மதுரை கோர்ட் திறப்பு: ஜெ.வரவேண்டும்- வேங்கடபதி
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என்று மத்தியசட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்.
டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
வரும் 17ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேறு பணி இருப்பதால் மதுரை உயர்நீதிமன்றத் திறப்பு விழா24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 24ம் நிச்சயமாக திறப்பு விழா நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் யார்- யார் விழாவில் பங்கேற்கிறார்கள் என்பது எனக்குத் தெரியுமாதலால், அவர்களதுபெயர்களை அறிவித்தேன். மாநில அரசு சார்பில் யார் -யார் கலந்து கொள்வார்கள் என்பதை திறப்பு விழாவிற்கானஏற்பாடுகளை செய்து வரும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவிப்பார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு முறையாக அழைப்பிதழ் அனுப்பப்படும். அவர் கலந்து கொள்ள வேண்டும். கலந்துகொள்வார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications