தடை நீக்க லாட்டரி வியாபாரிகள் கோரிக்கை
சென்னை:
லாட்டரி சீட்டுகளுக்கு தமிழக அரசு விதித்த நீக்க வேண்டும் என்று அகில இந்திய லாட்டரி மற்றும் சார்புதொழில்கள் கூட்டமைப்பு தலைவர்கள் மார்ட்டின், உஸ்மான் பயாஸ் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்குக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 18 மாதங்களாக லாட்டரி தடை காரணமாக இத் தொழிலை நம்பியிருந்த 6 லட்சம்குடும்பங்களை சேர்ந்த 25 லட்சம் பேர் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
எனவே லாட்டரி சீட்டுகள் மீதான தடையை நீக்கக் கோரி வருகிற 27ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னைதீவுத்திடலில் கோரிக்கை மாநாடு நடக்கிறது.
இம் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொள்வார்கள். மாநாட்டின்முடிவில் லாட்டரி மீதான தடையை நீக்கக் கோரி ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம்நிறைவேற்றப்படும். மேலும் மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டவுள்ள கோரிக்கை மனு பெட்டியில்ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் லாட்டரி தடை நீக்கக் கோரி மனுக்களை போடுவார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மான நகலுடன் லட்சக்கணக்கான இந்த கோரிக்கை மனுக்களையும்ஜெயலலிதாவை நேரில் சந்தித்துக் கொடுப்போம். இதற்கு நேரம் கேட்டுள்ளோம்.
அண்மைக் காலமாக பல்வேறு சலுகைகளை அளித்து தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கும்ஜெயலலிதா, லாட்டரி தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த 25 லட்சம் பேரின் கோரிக்கையை ஏற்று எங்கள்வாழ்க்கையில் ஒளி ஏற்றிட வேண்டும் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications