எல்லாம் "ஓவர்"; குட்டிச் சாமியார் "ரிலாக்ஸ்"
சேலம்:
பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இப்போது நான் நம்மதியாக இருக்கிறேன் என்று சர்ச்சைக்குரியசேலம் குட்டிச் சாமியார் ஸ்ரீதர பரணீதர சுவாமிகள் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தையே ஒரு கலக்கு கலக்கியவர் சேலம் குட்டிச் சாமியார். பெற்றோர் இவரைக் கடத்தமுயன்றதாக வெளியான தகவல், அதைத் தொடர்ந்து மான் தோலில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது,நம்பர் பிளேட் இல்லாத ஜீப்பில் சென்றது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார் குட்டிச் சாமியார்.
இந் நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்மீண்டும் சேலம் வந்தார் குட்டிச்சாமியார். செய்தியாளர்களை அழைத்துப் பேசிய அவர், நான் எங்கும்தலைமறைவாகி விடவில்லை. திருவண்ணாமலை சென்று வழிபட்டேன்.
திருச்சி, காட்டுப்பெருந்துறை, மூக்கனூர் ஆகிய ஊர்களுக்கும் சென்றேன். பகவானை வழிபடவே நான்சென்றிருந்தேன்.
ஆசிரமம் ஆரம்பிப்பது குறித்து முடிவெடுத்துள்ளோம். ஆனால் இதுவரை யார் மூலமாகவும் நான் பணம்வசூலிக்கவில்லை. அப்படி வெளியான தகவல்கள் பொய்யானவை.
எனது பெற்றோருடன் சமரசம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் என்னுடன் இருக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால்பிரச்சினை தீர்ந்து நிம்மதியாக இருக்கிறேன். எனது ஆன்மீகப் பணி இனி இடையூறு இல்லாமல் தொடரும் என்றார்குட்டிச் சாமியார்.
சாமியாரை வழி நடத்திச் செல்ல சேலத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள்அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications