நண்பர்கள் கிண்டல்; "அறுத்து" எறிந்தார் வாலிபர்
Subscribe to Oneindia Tamil
கோபிச்செட்டிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன்கோவில் பகுதியில் தனது உடல் நலம் குறித்து நண்பர்கள் கிண்டல் செய்ததால்,கோபமடைந்த வாலிபர், தனது ஆணுறுப்பை பிளேடால் வெட்டி எறிந்தார்.
வேட்டைக்காரன் கோவில் பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் மகன் சரவணன். இவர் மிகவும் மெலிந்து போய்க்காணப்படுவார். இதனால் இவரது நண்பர்கள் சரவணனை கேலி செய்துள்ளனர். இவரது ஆண்மை குறித்தும்அவர்கள் கேலி செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த சரவணன், கோபத்தில் பிளேடால் தனது ஆணுறுப்பை அறுத்து எறிந்தார். அதிர்ச்சியுற்றஅக்கம் பக்கத்தினர் சரவணனை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications