குட்டி சாமியார்: சமாதான முயற்சியில் மதுரை ஆதீனம்
சேலம்:
குட்டி சாமியாருக்கும், அவரது பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க சேலம் வருவதாக மதுரைஆதீனம் கூறியுள்ளார்.
குட்டி சாமியார் ஸ்ரீஹரி பரணிதர ராகவேந்திரருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே உள்ளபிரச்சினையைத்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக இருப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலம் சேலம் நிருபர்களிடம் இதுதொடர்பாக மதுரை ஆதினம் கூறியதாவது:
திருச்சியில் நான் தங்கியிருந்தபோது பரணிதரன் என்னைச் சந்தித்து ஆசிபெற்றுச் சென்றார். அவருடையஆன்மிகப் பணிக்கு இடையூறு செய்யாமல் அவரது பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும்.
பெற்றோருடன் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்த்து வைக்க சேலம் வருவேன் என்றார். கடந்த வாரம்விஜயகாந்த்- ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதலைத் தீர்த்து வைக்கத் தயார் என்று மதுரை ஆதீனம்கூறியது குறிப்பிடத்தக்கது.
மதுரை ஆதீனம் சேலம் வருவது குறித்து ஸ்ரீஹரி பரணிதர ராகவேந்திரரிடம் கேட்டபோது,
மதுரை ஆதீனம் சேலம் வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றார்.
இந் நிலையில் சேலம், தொப்பூர் அருகேயுள்ள ஈசல்பட்டி பகுதிக்கு சென்ற குட்டி சாமியார் சிறப்பு பூஜை நடத்தி ஒருமரக்கன்றை நட்டார். இதனையடுத்து அவரது சீடர்கள் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.












Click it and Unblock the Notifications