முஷாரப்புக்கு மன்மோகன் சிங் கடிதம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தான் எழுதிய கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான்வெளியுறவு செயலரிடம் அளித்தார்.
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு செயலாளர்களுக்கு இடையேயான இரண்டு நாள் பேச்சுவார்த்தைஇன்று டெல்லியில் முடிவடைந்தது.
பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கும், பாகிஸ்தான்வெளியுறவுத் துறை செயலாளர் ரியாஸ் கோஹரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ரியாஸ் கோஹர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய கோஹர், அதிபர் முஷாரப்பிடம் ஒப்படைக்குமாறு மன்மோகன் சிங் தன்னிடம் கடிதம்ஒன்றை அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதால் தாங்கள் பாகிஸ்தான் செல்லவுள்ளதாகவும்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications