அடுப்பு எரிப்பு போராட்டத்தில் குதிக்கிறார் டி.ஆர்
கோவை:
கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று அடுப்பு எரிப்பு போராட்டத்தில்டி.ராஜேந்தர் ஈடுபடுகிறார்.
கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில், டி.ராஜேந்தரின் அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்சார்பில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.
மைக் வைத்துப் பேச போலீஸ் அனுமதி கிடைக்காததால், வெறும் வாயால் பேசிய டி.ராஜேந்தர் கூறியதாவது: மைக்வைத்துப் பேச அனுமதி இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் நான் பேசுவேன். தன்னம்பிக்கையுடன் ஒரு தலைராகத்தில் ஆரம்பித்தவன், கோட்டை வரை சென்று வந்தேன்.
பெரியாரின் மன உறுதி, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு ஏழை,எளிய மக்களுக்குக் குரல் கொடுப்பேன்.
மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மண்ணெண்ணை, கேஸ் விலை ஏறி விட்டது. ஆட்சிக் கட்டிலில் ஏற்றியதற்குஉபகாரமாக மக்களுக்கு தந்த பரிசா இது? இதைக் கண்டிக்கும் வகையில், 28ம் தேதி வள்ளுவர் கோட்டம் முன்புஅடுப்பு எரிப்புப் போராட்டம் நடத்தவுள்ளேன் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications