சத்துணவில் மீண்டும் முட்டை சப்ளை தொடக்கம்
சென்னை:
தமிழகம் முழுவதும் 75 லட்சம் மாணவ, மாணவியருக்கு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் தொடங்கியது.
சத்துணவுடன் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை நிதிநிலையைக் காரணம் காட்டி, நிறுத்தியது தமிழகஅரசு. இந் நிலையில் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இத் திட்டத்தை மீண்டும் தொடங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முதல் முட்டை வழங்கப்படுவது தொடங்கியது.
நாமக்கல் மற்றும் ஆந்திராவிலிருந்து கொள்தல் செய்யப்படும் முட்டைகள் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டபள்ளிக் கூடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
முட்டைகளில் கலப்படம் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வாரம் ஒரு நிறத்தில் இந்த முட்டைகளின் மீதுத.அ. (தமிழ்நாடு அரசு) என்ற முத்திரை பதிக்கப்படும்.
தொடக்க நாளான நேற்று முட்டைகளின் மேல் பச்சை நிறத்தில் (முதல்வருக்கு ராசியான நிறம்) தமிழக அரசின்முத்திரை பதிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications