ஜெ. வழக்கு தாமதம்: கருணாநிதி அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தேவையில்லாத தாமதம் நிலவுவதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உத்தரவுக்குப் பின் 70 நாட்களில் வேறு மாநிலத்தில் மோடி மீதான வழக்கு விசாரணை தொடங்கியது.

ஆனால், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதிஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை மாற்றி 223 நாட்களாகியும் கர்நாடகத்தில் இன்னும் வழக்கு விசாரணைதொடங்கவில்லை.

வழக்கு தொடர்பான ஆவணங்களை பெங்களூருக்கு தரை வழியாக அனுப்புவதா, ரயிலில் அனுப்புவதா என்றுகேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.

ஆவணங்களை எப்படி அனுப்புவது என்பது குறித்தே இன்னும் முடிவாகாத நிலை நிலவுகிறது.

இந்த வழக்கில் விசாரணை தொடங்க தாமதம் ஏற்பட்டாலும் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்றுநம்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+