தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 5 ஐ.ஜிக்கள், கூடுதல் டைரக்டர் ஜெனரல்களாக(டிஜிபி) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மண்டபம் அகதி முகாம் சிறப்பு ஐ.ஜியான சியாம் சுந்தரும் கூடுதல் டிஜிபியாக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ தென் மண்டல ஐ.ஜியான சவாணிக்கு கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். டேராடூன்தெஹ்ரி மின் உற்பத்தித் திட்டத்தின் கண்காணிப்பாளராக உள்ள தாபாவும் கூடுதல் டிபியாக்கப்பட்டுள்ளார். இந்தஇருவரும் தொடர்ந்து மத்திய அரசுப் பணிகளில் தொடர்வர்.

சென்னையில் தேர்தல்கள் துறை ஐஜியாக உள்ள விபாகர் சர்மாவும், மதுரை போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியானதங்கராஜனும் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டு, இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சர்மா சென்னை போலீஸ் நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாகவும், தங்கராஜன் சென்னை பொருளாதாரக்குற்றவியல் கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை போலீஸ் நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த மூர்த்தி, சிஐடி போலீல் குற்றப் பிரிவுக்குமாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை சிஐடி குற்றப் பிரிவின் கூடுதல் டிஜிபியாக இருந்த பாலசந்திரன், தமிழ்நாடு போலீஸ் தேர்வு வாரியத்தலைவராக்கப்பட்டுள்ளார். இதுவரை இப் பதவியில் இருந்த முகர்ஜி மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் வாங்கிச்சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+