சென்னைக்கு குட்பை சொல்லும் 73 வயது ரயில்!
சென்னை:
சென்னையில் கடந்த 73 ஆண்டுகளாக ஓடி வந்த மீட்டர்கேஜ் மின்சார ரயில் நாளை நள்ளிரவுடன்நிறுத்தப்படுகிறது.
சென்னை மக்கள் கூட்டத்திற்கு மிகப் பெரிய நிவாரணமாக இருந்து வருவது மின்சார ரயில்கள் தான். மின்சார ரயில்ஒரு நாள் இயங்காவிட்டாலும் நகரமே ஸ்தம்பித்துப் போய் விடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் ஒருஅங்கமாகி விட்டது மின்சார ரயில்.
சென்னை நகரில் உள்ள மீட்டர்கேஜ் மின்சாரப் பாதை அனைத்தும் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அகலப்பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. தற்போது எழும்பூர்-தாம்பரம் வரையிலான மின்சாரப் பாதை மட்டுமே மீட்டர்கேஜாக உள்ளது.
கடந்த 1931ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் முதல் முறையாக மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.மீட்டர்கேஜ் பாதையில் இந்த ரயில்கள் ஓடத் தொடங்கின.
கருகருவென புகையைக் கக்கியயபடி ஓடின இந்த ரயில்கள்.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட இந்த முதல் ரயிலை, மாகாண ஆளுநராக இருந்த ஜார்ஜ்ஸ்டான்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆரம்பத்தில் கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை மொத்தம் 12 ரயில் நிலையங்கள் இருந்தன. படிப்படியாக இது 18ரயில் நிலையங்களாக அதிகரிக்கப்பட்டன.
1965ம் ஆண்டு மின்சார ரயில் என்ஜின் பல மாற்றங்கள் கண்டது. ரயில் பெட்டிகளும் மாற்றத்திற்கு உள்ளாயின.புதுப் பொலிவுடன் மீட்டர்கேஜ் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கின.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுக்கு ஓடும் இந்த மீட்டர்கேஜ்ரயில்கள்தான் இந்தியாவின் முதல் புறநகர் மின்சார ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினசரி 3 லட்சம் பயணிகளுக்கு வசதியாக இருந்து வந்த மீட்டர்கேஜ் மின்சார ரயில்கள் நாளை நள்ளிரவு 12மணியுடன் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளன. நாளை மறுநாள் முதல் எழும்பூர்-தாம்பரம் இடையிலான மீட்டர்கேஜ்பாதைகளை அகற்றி விட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
இதன் மூலம் 73 ஆண்டு கால வரலாறு சென்னை மக்களுக்கு குட்பை சொல்லப் போகிறது.












Click it and Unblock the Notifications