ஜோதிடர் அட்வைஸ்?: கும்பாபிஷேகங்களுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் கோவில் கும்பாபிஷேகங்களை தள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

தற்போது ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை என்றும், கோவில் கும்பாபிஷேகங்கள் அவரது ஆட்சிக்கு உலை வைத்து விடும் என்றும்அவரது ஆஸ்தான ஜோதிடர் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே முதல் கட்டமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதுமே கும்பாபிஷேகங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளதுஅறநிலையத்துறை.

இது தொடர்பாக இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் விடுத்துள்ள அறிக்கையில்,

ஏதோ சில காரணங்களுக்காக கோவில்களில் கும்பாபிஷேகங்களை தள்ளி வைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின்கும்பாபிஷேகங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது சரியான செயல் அல்ல.

இது பக்தர்களுக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அரசின் பிடியிலிருந்து மீட்காவிட்டால்இதுபோன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

கும்பாபிஷேகங்கள் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் உரிமைமக்களுக்கு உண்டு.

முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராம.கோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+