விஜயகாந்த்துக்கு ஆதரவாக போலீஸ்: பாமக புகார்
கடலூர்:
காவல்துறையினர் நடிகர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சி புகார் கூறியுள்ளது.
அக் கட்சியின் எம்.எல்.ஏவான வேல்முருகன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபத்தில் நடந்த பாமகவினர் மீதான தாக்குதல்களில் தொடர்புடைய விஜயகாந்த் ரசிகர்களுக்கு போலீஸார் முழு ஆதரவு கொடுத்து, பக்கபலமாக இருந்து வருகின்றனர். பாமகவினரை தேவையில்லாமல் அடித்து, காயப்படுத்தியுள்ளது போலீஸ்.
என்னைக் கைது செய்யவும் போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். எனது நடமாட்டத்தைக் கவனித்து வருகின்றனர். மேலும், எனக்குகடந்த 4 ஆண்டு காலமாக கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸாரின் நடவடிக்கையை கண்டு நான் பயப்படவில்லை. சிறை செல்லவும் நான் தயாராகவே இருக்கிறேன்.
கடலூர் மாவட்டத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் நடத்திய வன்முறைகளுக்கு போலீசார் முழு உதவி புரிந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications