17 வயது சிறுமியை கற்பழித்த இன்ஸ்பெக்டர் !
திருநெல்வேலி:
17 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக காவல்துறை இன்ஸ்பெக்டர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டனம் காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளராகப் பணியாற்றியவர்ராமகிருஷ்ணன். அப்போது அப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஏமாற்றிமானபங்கம் செய்துள்ளார்.
பின்னர் ராமகிருஷ்ணன் குளத்தூர் காவல் நிலையத்திற்கும், அதைத் தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறைக் கட்டுப்பாட்டுஅறைக்கும் மாற்றப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பேச்சித் தாய், தனது மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கோரியும்ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனிடம் மனு கொடுத்தார் பேச்சித்தாய்.
இதையடுத்து ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் மீது குலசேகரப்பட்டனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications