நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு வாரியத் தலைவர் பதவி
சென்னை:
சமூக நல வாரியத் தலைவராக அதிமுக மேடைப் பேச்சாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதியை முதல்வர் ஜெயலலிதாநியமித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு வாரியத் தலைவர்களாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். மேலும்,மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்களிலு பலரும் வாரியத் தலைவர்களாக்கப்பட்டுள்ளனர்
.இந் நிலையில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவராக அதிமுக மேடைப் பேச்சாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதிநியமிக்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து இதுவரை அதிமுகவினர் 18 பேர் வாரியத் தலைவர்களாகியுள்ளனர்.
டபுள் மீனிங்பாக்யராஜினால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சி.ஆர்.சரஸ்வதி, அவர் நடத்தி வந்த கட்சியிலும்உறுப்பினராக இருந்தார்.
சிறு சிறு வேடங்களில் கணிசமான படங்களில் நடித்துள்ள சரஸ்வதி பின்னர் மதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அங்கிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications