மேலவளவு தலித்கள் படுகொலை நினைவு தினம்
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் 6 தலித் சமுதாயதிதனர் படுகொலை செய்யப்பட்டதன் 7வதுஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு முன் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அவரையும், மேலும் 6 தலித்களையும் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடு ரோட்டில் வெட்டிக் கொலைசெய்தனர்.
இந்த நினைவு தினம் நேற்று மேலவளவு கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்திருமாவளவன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மோகன் உள்ளிட்டோர் மேலவளவில் உள்ள தலித்களின் நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
நினைவு தினத்தை முன்னிட்டு மேலமளவு கிராமம் மற்றும் மேலூரில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தக் கொலைகளுக்குப் பின் மேலவளவு கிராம பஞசாயத்துக்கு தேர்தலே நடக்கவில்லை. தேர்தல் நடத்தப்பட்டாலும் தலித்கள்போட்டியிடவில்லை. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டே வந்தது.
ஆனால், கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஒருவர் போட்டியிட்டு வென்றார். ஆனால், உடனே தனது பதவியைராஜினாமா செய்துவிட்டார். இப்போது அவர் மேலவளவு கிராமத்துக்குள் நுழைய முடியாத சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications