ஸ்டண்ட் கலைஞர்கள் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாளை ரசிகர் மன்றத்தினருடன் விஜய்காந்த் நடத்தவுள்ள முக்கிய சந்திப்பு நிகழ்ச்சி சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
பா.ம.கவினருடான மோதல் தொடர்ந்து கொண்டுள்ள நிலையில், நாளைய கூட்டத்திலும் ஏதாவது தகராறு நடக்கலாம் என விஜய்காந்த் தரப்பில் எதிர்பார்க்கின்றனர்.
இதைத் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர். தங்களது கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு ரசிகர் மன்றத்தின் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஸ்டண்ட் கலைஞர்களையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சீருடை அணிந்த விஜய்காந்த் ரசிகர் மன்றத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நாளைய கூட்டம் கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்துக்கு சொந்தமான ஆண்டாள்-அழகர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications