Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதி, பாதுகாப்பு கோருகிறார் சுப. இளவரசன் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர் விடுதலை இயக்கத் தலைவரான தனது கணவர் சுப. இளவரசன் கைது செய்யப்பட்டு விட்டதால் பொருளாதாரரீதியாகமிகவும் சிரமப்படுவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி பொருளுதவியும், பாதுகாப்பும் தருமாறு தமிழகஅரசுக்கு அவரது மனைவி மனைவி கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களால் சுப. இளவரசன் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டதாக அதிரடிப்படை கூறி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.ஆனால், அவரே பல மாதங்களுக்கு முன் அதிரடிப்படையினரிடம் சரணடைந்துவிட்டதாகவும், அதை ரகசியமாக வைத்திருந்து,தாங்கள் பிடித்ததாக படையினர் கணக்கு காட்டியதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.

தற்போது சுப. இளவரசன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி கவிதா தங்குவதற்குக் கூடவீடில்லாமல் சிரமப்படுவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் கவிதா தமிழக அரசுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது கணவரை கர்நாடக அதிரடிப்படையினர் நாகப்பா கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். நாகப்பாவழக்கில் அவரை சேர்த்த பின் கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்று போலி என்கெளண்டர் மூலம் அவரைக் கொல்லதிட்டமிட்டுள்ளனர்.

எனவே தமிழக போலீஸாரே எனது கணவரை விசாரிக்க வேண்டும். வேறு மாநிலத்திற்கு எனது கணவரை அனுப்பக் கூடாது.

ஆரம்பத்தில் எனது கணவர் மீது 18 வழக்குகள்தான் தொடரப்பட்டிருந்தன. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது50 வழக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடிப்படையே இல்லாத பொய் வழக்குகள்.

எனது கணவருக்கும், அவரது கூட்டாளி சகாதேவனுக்கும் இடையே ஓரினச் சேர்க்கை இருப்பதாக காவல்துறையினர் கூறுவதுஅப்பட்டமான பொய்யாகும். சுப. இளவரசன் தனது இயக்கத்தைச் சேர்ந்த 78 பேருக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார்.

அப்படி திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர்தான் சகாதேவன். அவருக்கும் எனது கணவருக்கும் வேறு எந்தவிதமானதொடர்பும் இல்லை.

எனது கணவர் கைதுக்குப் பின் நான் மிகவம் உடைந்து போயுள்ளேன். எனது மாமனார் வீட்டில்தான் தற்போது அடைக்கலம்புகுந்துள்ளேன். பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுகிறேன். எனது உயிருக்கும் பாதுகாப்பில்லை.

எனவே தமிழக அரசு எனக்கு வாழ்வதற்கு உரிய உதவியையும், பாதுகாப்பையும் வழங்கக் கோருகிறேன் என்று கூறியுள்ளார்கவிதா.

சுப.இளவரசனுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருப்பதாக கண்டுபிடித்தது சேலம் போலீஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+