ஈராக் தமிழர்களை மீட்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
ஈராக்கில் பலூஜா முகாமில் வாடும் 3 தமிழர்கள் உள்ளிட்ட 18 இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஜோர்டான் நாட்டில் ஜாஸ்பர் என்ற சர்வதேச நிறுவனத்தில் சமையல் வேலைக்காக 18 இந்தியர்கள் சென்றனர்.ஆனால் அவர்களுக்கு ஜோர்டானில் வேலை தராமல் ஈராக் நாட்டில் உள்ள பலூஜா நகருக்கு அனுப்பியுள்ளனர்.
தற்போது அந்த 18 பேரும் பலூஜாவில் வேலையின்றி தவித்து வருகின்றனர். உணவு, இருப்பிடம் போன்றஅடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களில் சுல்தான், ரமேஷ்குமார், அந்தோணிமேக்ஸ்மில்லன் என்ற 3 தமிழர்களும் அடக்கம்.
18 பேரையும் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் தாங்கள் ஈடுபட வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த 18 பேருமே தமிழர்கள் என செய்திகள் வந்தன.












Click it and Unblock the Notifications