தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
சென்னையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்வெடிகுண்டுகள் கொண்டு செல்லப்படுவதாக வந்த கடிதத்தையடுத்து, அந்த ரயில் ஆந்திர மாநிலம்விஜயவாடாவில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை விஜயவாடாவை அந்த ரயில் நெருங்கிய நிலையில், அம் மாநில ரயில்வேபோலீசாருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அதில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு நபர்வெடிகுண்டுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ரயிலை நிறுத்திய போலீசார் சுமார் அரை மணிநேரம் மோப்ப நாய்கள், வெடிகுண்டுநிபுணர்களுடன் சோதனை நடத்தினர்.
ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த ரயில் மீண்டும் தனதுபயணத்தைத் தொடர்ந்தது.












Click it and Unblock the Notifications