விமான நிலையத்தில் திமுக எம்.பி. மகன் தகராறு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திமுக எம்.பி. கரூர் பழனிச்சாமியின் மகன் விமான நிலையஅதிகாரிகளுடன் தகராறு செய்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தொகுதியில் கரூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கே.சி. பழனிச்சாமி. இவரது மகன் சுரேந்திரன் அமெரிக்கா செல்ல சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வந்தார்.

விமானம் கிளம்புவதற்கு முன் தனது தந்தையுடன் பேச விமான நிலையத்துக்கு வந்தார்.

விமானம் புறப்படத் தயாராக இருந்ததால் விமானத்தில் சுரேந்திரனைத் தவிர 246 பயணிகளும் ஏறிவிட்டனர்.சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த விமான அதிகாரிகள் சுரேந்திரன் வராததால் விமானத்தைக் கிளப்பத்தொடங்கினர்.

இதன் பிறகு விமான நிலையத்திற்குள் வந்த சுரேந்திரன் விமானம் புறப்பட்டுச் சென்றதை அறிந்தார். இதனால்கோபம் அடைந்து விமான நிலைய அதிகாரிகளிடம் தகராறு செய்தார்.

விமான நிலைய அதிகாரிகள் அவரை மற்றொரு விமானத்தில் அனுப்பி வைப்பதாக சமாதானம் செய்தனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+