மத்திய சிறையில் முகம்மது அலி அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிபிசிஐடிடிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து அவர்களை வரும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன்உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரை சென்னையில் 2ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தபோது அவரை தப்ப விட்டதாக முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர்ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர போலி முத்திரைத் தாள்களை விற்க நிஜாமூதீனுக்கு உதவி செய்த மதுரை எல்.ஐ.சி. பயிற்சி மைய நிர்வாகஅதிகாரி ராமசாமி சாது என்பவரும் கைதாகியுள்ளார்.

இவர்கள் 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.இதற்கான அனுமதியை சென்னை 10வது பெருநகர குற்றவியல் நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கியிருந்தார்.

4 நாள் காவல் முடிந்தவுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களை தன்னிடம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மூவரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மூவரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை நாளை விசாரிப்பதாகக் கூறியநீதிபதி, மூவரையும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அலிக்கும், சங்கருக்கும் சிறையில் முதல் வகுப்பு அறை வழங்கப்பட வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள்கோரினர். இதை நீதிபதி அனுமதித்தார்.

இதையடுத்து மூவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்கும் கைதிகளைபோலீசாரோ, சிபிஐயோ விசாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+