மத்திய சிறையில் முகம்மது அலி அடைப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிபிசிஐடிடிஐஜி முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை வரும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன்உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரை சென்னையில் 2ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தபோது அவரை தப்ப விட்டதாக முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர்ஆகியோர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர போலி முத்திரைத் தாள்களை விற்க நிஜாமூதீனுக்கு உதவி செய்த மதுரை எல்.ஐ.சி. பயிற்சி மைய நிர்வாகஅதிகாரி ராமசாமி சாது என்பவரும் கைதாகியுள்ளார்.
இவர்கள் 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து கடந்த 4 நாட்களாக விசாரித்து வந்தனர்.இதற்கான அனுமதியை சென்னை 10வது பெருநகர குற்றவியல் நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கியிருந்தார்.
4 நாள் காவல் முடிந்தவுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களை தன்னிடம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும்நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மூவரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மூவரின் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதனை நாளை விசாரிப்பதாகக் கூறியநீதிபதி, மூவரையும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அலிக்கும், சங்கருக்கும் சிறையில் முதல் வகுப்பு அறை வழங்கப்பட வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள்கோரினர். இதை நீதிபதி அனுமதித்தார்.
இதையடுத்து மூவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்கும் கைதிகளைபோலீசாரோ, சிபிஐயோ விசாரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications