மாநில ஆளுநர்களாக காங். தலைவர்கள் நியமனம்
டெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவர்களான நவல் கிஷோர் சர்மா, எஸ்.சி. ஜமீர் ஆகியோரும், முன்னாள் மத்தியஉளவுப் பிரிவின் தலைவரான டி.வி.ராஜேஸ்வரும், முன்னாள் மத்திய அரசு ஊழியர்தேர்வாணையத் தலைவரான ஏ.ஆர். கித்வாய் ஆகியோரும் மாநில ஆளுநர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்மா குஜராத் ஆளுநராகவும், கித்வாய் ஹரியாணா ஆளுநராகவும், ராஜேஸ்வர் உத்தரப் பிரதேசஆளுநராகவும், ஜமீர் கோவா துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சர்மா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவர். ராஜேஸ்வர், முன்னாள்மத்திய உளவுப் பிரிவின் (ஐபி) தலைவராக இருந்தவர்.
ஜமீர் முன்னாள் நாகாலாந்து முதல்வராகவும், கித்வாய் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையத்தின்தலைவராகவும் இருந்தவராவர்.
இந்த மாநிலங்களில் ஆளுநர்களாக இருந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வைச் சேர்ந்த பாபு பரமானந்த்,விஷ்ணுகாந்த் சாஸ்திரி, கைலாஷ்பதி மிஸ்ரா, கேதார்நாத் சஹானி ஆகிய நால்வரையும் கடந்தவாரம் மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது நினைவுகூறத்தக்கது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில ஆளுநரும் முக்கிய பா.ஜ.க. தலைவருமான மதன்லால் குரானாநீக்கப்படவில்லை. இவருக்கும் பா.ஜ.க. முதல்வரான உமா பாரதிக்கும் இடையே அதிகாரப் போட்டிநடந்து வருகிறது.
இதனால் குரானா ஆளுநராக நீடித்தால் அம் மாநில பா.ஜ.கவில் குழப்பத்தை உருவாக்கலாம் என்றுகாங்கிரஸ் நினைக்கிறது. இதனால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்காமல் விட்டுவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications