கராச்சிக்கு கண் கொடுத்த சென்னை !
சென்னை:
பிறவியிலேயே 2 கண்களும் இல்லாத, பாகிஸ்தானைச் சேர்ந்த 1 வயது சிறுவனுக்கு சென்னையைச் சேர்ந்தஇருவரின் கண்கள் பொருத்தப்பட்டு அந்த சிறுவன் பார்வை பெற்றுள்ளான்.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் முகம்மது சலீம். வங்கி ஊழியரான இவரது நான்காவது குழந்தைமுகம்மது அகம்மது. பிறவியிலேயே முகம்மது அகம்மதுவுக்கு கண் பார்வை இல்லை.
பாகிஸ்தானின் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை செய்து பார்த்தும் முகம்மதுவுக்கு பார்வை வராது என்றுடாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இந் நிலையில் சென்னையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனைக்குச்செல்லுமாறு சில டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து அகர்வால் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்துக் கொண்டு வந்தார் சலீம். முகம்மதுவின்கண்களை ஆய்வு செய்து பார்த்த அகர்வால் மருத்துவமனை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றுக்கண்களைப் பொருத்த முடிவு செய்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் தங்களது கண்களை மருத்துவமனைக்குக்தானமாக கொடுத்திருந்தனர். முதல் கட்டமாக ஒரு கண்ணில் அறுவைச் சிகிச்சை செய்து மாற்றுக் கண்பொருத்தப்பட்டது. 2 நாட்கள் கழித்து இன்னொரு கண்ணும் பொருத்தப்பட்டது.
தற்போது முகம்மதுவுக்கு இரு கண்களாலும் பார்க்க முடிகிறது. பிறந்தது முதல் பார்வையை இழந்து இருந்தமுகம்மது இப்போதுதான் முதல் முறையாக உலகைக் காண்கிறான். தங்களது குழந்தையால் வெளி உலகைப் பார்க்கமுடிவது முகம்மதுவின் பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியையும், எல்லையில்லாத ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது.
விரைவில் பாகிஸ்தான் செல்லவுள்ள அவர்கள் 6 மாதம் கழித்து பரிசோதனைக்காக சென்னைக்கு வரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications