இலங்கை: இன்று கரும் புலிகள் தினம்
கொழும்பு:
தற்கொலைப் படையான கரும் புலிகள் தினத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றுகொண்டாடியது.
17 ஆண்டுகளுக்கு முன் 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி முதல் முறையாக தற்கொலைத் தாக்குதலைபுலிகள் இயக்கம் நடத்தியது. கரும்புலிகள் படையின் கேப்டன் மில்லர் இந்த தினத்தில் தான்வடமராட்சியில் இருந்த ராணுவ முகாமுக்குள் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட லாரியுடன் சென்றுதாக்குதல் நடத்தினார்.
அதன் பின்னர் இந்தப் படையைக் கொண்டு பல முறை இலங்கை ராணுவத்தை புலிகள் இயக்கம்நிலைகுலையச் செய்தது.
அந்த முதல் தாக்குதல் நடந்த தினத்தை கரும்புலிகள் தினமாக எல்.டி.டி.ஈ. கொண்டாடி வருகிறது.இதையொட்டி இன்று வட-கிழக்குப் பகுதியில் உள்ள புலிகளின் முகாம்கள், அலுவலகங்களில்விரிவான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் புலிகளின் தலைவர் பிரபாகரன், தீபத்தை ஏற்றி வைத்து இந்த தினத்தைநினைவுகூறவுள்ளார்.












Click it and Unblock the Notifications